Tuesday, August 25, 2020

மழைப்பாடலின் விரிவில்

 

 

அன்புள்ள ஜெ

மழைப்பாடலின் இறுதியில் இருக்கிறேன். எவ்வளவுபெரிய கதை என்ற பிரமிப்பை அடைந்தேன். எவ்வளவு நிகழ்ச்சிகள். எவ்வளவு மோதல்கள். ஆனால் இப்போதுதான் பாண்டவர்கள் பிறந்திருக்கிறார்கள். இனிமேல்தான் கதையே ஆரம்பிக்கப்போகிறது. ஆச்சரியம்தான். இதை எப்படி முழுக்க வாசிக்கப்போகிறோம், எப்படி ஞாபகம் வைத்துக்கொள்ளப்போகிறோம் என்று நினைக்கையில் பிரமிப்புதான் ஏற்படுகிறது. ஆனால் ஏராளமான வாசகர்கள் 26 நாவல்களையுமே ஞாபகம் வைத்துக்கொண்டு பேசுவதைக் காணும்போது நம்பிக்கையும் வருகிறது

ஆர்.என்..குமார்