Wednesday, August 12, 2020

துரோணர்

அன்புள்ள ஜெ

துரோணரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அம்புகளின் வழியாக மெய்ஞானத்தை அடைந்த அவரால் தன்னை வெல்லவே முடியவில்லை. அவருடைய சாவுகூட அப்படிப்பட்டதுதான். துரோணருக்கும் பீஷ்மருக்கும் ஒரு சமானத்தன்மை உண்டு.ரெண்டுபேருமே அம்புகள் வழியாக மெய்மையை தேடியவர்கள். ஆனால் அவர்களில் பீஷ்மர் முக்தி அடைகிறார். துரோணரின் தலையைதேடி எடுக்கவேண்டியிருக்கிறது. ஒரு சின்ன மனக்குறை, பிறப்பிலேயே வந்த தவிப்பு, அவரை கடைசிவரை வாழவே விடவில்லை. அவரை அழித்துவிட்டது. அவருடைய ஆத்மாவையே அழித்துவிட்டது

அவர் நோயுற்றவர், ஆகவே நோயை பரப்புகிறர். கர்ணனிலும் ஏகலைவனிலும் அவர்தான் அப்படி ஆழமனா பிறப்புசார்ந்த நிறைவில்லாமையை கொடுத்தவர். அவர்கள் வாழ்க்கையின் அழிவுக்கும் அவர்தான் காரணம். அவருடைய சொந்த மகனின் நிறைவில்லாமைக்கும் அவர்தான் வழிவகுக்கிறார்.

சாமிநாதன்