Tuesday, August 18, 2020

காதல் காமம்

 


அன்புள்ள ஜெ

முதற்கனல் நாவல் முதலே வெண்முரசில் ஆண்பெண் உறவின் விளையாட்டுக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நுட்பமான உணர்வுச்சிக்கல்களும் நேரடியான காமமும் சொல்லப்படாத வேட்கையும் மூன்றுமே வருகின்றன. கர்ணன் உள்ளிட்டவர்களுக்கு பாஞ்சாலியுடன் இருக்கும் உறவு மட்டுமல்ல திருஷ்டதுய்ம்னன் பூரிசிரவஸ் போன்றவர்களுக்கு இருக்கும் காதலுறவுகளும் நுட்பமானவை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகை. எத்தனை வகையான காதலும் காமமும் என்ற பிரமிப்பே எழுகிறது. விதுரரின் சொல்லப்படாத காதலும் அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையே ஓடும் கசப்பு கலந்த காதலும் எல்லாம் ஒரு பெரிய ஞாபகமாக மனசிலே ஓடுகின்றன. எண்ணி எண்ணி தொடுத்துக்கொள்லவே முடியாத அளவுக்கு ஏராளமான உறவுச்சிக்கல்கள்


ஜெயக்குமார்