Saturday, August 22, 2020

கதைசொல்லல்

 

நான் வெண்முரசு நாவல்களில் வண்ணக்கடல் வரை வந்துவிட்டேன். முதலில் இருந்தே நான் வாசித்தவற்றை ஒரு ஐந்துநிமிடம் கதைச்சுருக்கமாகச் சொல்லி பதிவுசெய்துகொண்டே வந்தேன். ஏன் அப்படிச் செய்தேன் என்று தெரியவில்லை. அதை பிறகு என் குழந்தைகளிடம் சொல்ல ஆரம்பித்தேன். இந்த பயிற்சி மூன்றுமாதமாக நடைபெறுகிறது. இந்நாவல்களை முழுசாக நினைவில் நிறுத்திக்கொள்ள இது மிக உதவியாக இருக்கிறது. கதையை சொல்லும்போது அது இன்னும் சுருக்கமாக ஆனால் உணர்வுரீதியானதாக ஆகிவிடுகிறது. வெண்முரசு கதைசொல்லும்போட்டி கூட ஒன்று வைக்கலாம் என்று நினைக்கிறேன். பலர் கதைசொல்ல முன்வருவார்கள்

ஆர்.எஸ்.பிரசாத்