Sunday, August 23, 2020

மழைப்பாடல் வாசிப்பது

  

அன்புள்ள ஜெ

மழைப்பாடலை கடந்துகொண்டிருக்கிறேன். நாங்கள் மூன்றுபேர் வெண்முரசை படிக்க ஆரம்பித்தோம். எங்களில் இருவருக்கு முதற்கனலையே தாண்டமுடியவில்லை. என்னவென்றால் அவர்கள் எவருமே சமீபகாலமாக எதையும் படிக்கவில்லை. பத்தாண்டுகளுக்கு முன் படித்திருந்தார்கள். அதன்பின் படிப்பதாக நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் படித்ததெல்லாம் உதிரியான வரிகளைத்தான். முகநூல்வாசிப்பு வாசிப்பு அல்ல என்று இப்போதுதான் அவர்களுக்கு தெரிகிறது

முதற்கனலை அவர்கள் பத்துநாட்களில் வாசித்தார்கள். வாசித்து முடித்தபோது துண்டுதுண்டுகளாக ஞாபகம் இருக்கிறதே ஒழிய ஒரு ஸ்டரக்சராக எதுவுமே ஞாபகமில்லை. தொகுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே பிரமித்துவிட்டார்கள். மொத்த வெண்முரசும் எப்படி நினைவிலே நிற்கும் என்று தயங்குகிறார்கள். ஆனால் உங்கள் தளத்தில் ஏராளமானவர்கள் ஒட்டுமொத்த வெண்முரசையும் ஞாபகம் வைத்துபேசுவதையும் காணமுடிகிறது. இதுதான் எனக்கெல்லாம் ஊக்கம் அளிப்பதாக உள்ளது

சாந்தி ஆர்