Wednesday, August 19, 2020

சொர்க்கம்

 

அன்புள்ள ஜெ

வெண்முரசு முடிந்தபின்னர் கொண்டாட்ட மனநிலையை மீட்பதற்காக நான் வாசித்தபகுதி அர்ஜுனனின் பிறப்பு. சரத்வானின்ஆசிரமம் அமைந்திருக்கும் அந்த கனவுபோன்ற நிலம். அங்கே மின்னல்கள் சூடிய நீர்த்துளிகள். எங்கு நோக்கினாலும் வானவிற்கள். அந்த இடம் படிக்கப்படிக்க மனம் கொப்பளித்தபடியே இருந்தது. இந்த கொரோனா காலத்தில் வீட்டுக்குள் அரை ஆண்டாக அடைந்து கிடப்பதனால் உடனே கிளம்பிவிடவேண்டும் என்ற வெறி எழுந்துவிட்டது. அர்ஜுனன் அந்த சொர்க்கத்தில் பிறந்தவன். வாழ்க்கை முழுக்க அவன் தேடியலைந்தது அந்த சொர்க்கத்தைத்தான்

ராஜசேகர்