Saturday, August 29, 2020

கடல்

 


அன்புள்ள ஜெ

வெண்முரசின் முதல்வாசிப்பில் சிலபகுதிகள் கிடைக்கின்றன. பலவிஷயங்கள் கைதவறிவிடுகின்றன. அப்படி முக்கியமாக கைநழுவிப்போகும் விஷயம் ன்னவென்றால் உருவகமாக சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள்தான்

அவர்களால் இறுதிவரை கடலை புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவர்கள் இளமை முதலே யமுனையில் நீராடி வளர்ந்தவர்கள். ஒரு திசை நோக்கி ஒழுகும் நீர் அவர்களின் தோள்களின் நினைவாக இருந்தது. எல்லாத் திசைக்கும் செல்வதும், எங்கும் செல்லாததுமான கடல் அவர்களுக்கு பழகவே இல்லை

கல்பொரு சிறுநுரையில் வரும் இந்தவரியை வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு சின்ன வாழ்க்கையிலிருந்து பெரிய வாழ்க்கைக்குள் சென்ற எல்லாருக்குமே இதெல்லாம் பொருந்தும். அவர்களில் காளிந்தி அன்னை கண்ணனைப் பற்றிக்கொண்டு அப்படியே வாழ்ந்துவிட்டாள். அவளுடைய மைந்தர்கள் தடுமாறுகிறார்கள்

எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி