Sunday, August 23, 2020

வெண்முரசின் மிக அழகான பகுதிகள்

 

அன்புள்ள ஜெ

மழைப்பாடலில்தான் வெண்முரசின் மிக அழகான பகுதிகள் உள்ளன. நான் மொத்தமாகவே வெண்முரசை வாசித்துவிட்டேன். வெண்முரசிலேயே அழகான பகுதிகள் எவை என்று தேடி அவற்றை வாசிக்க விரும்பினேன். குந்தியும் பாண்டுவும் சதசிருங்கத்தில் வாழும் நாட்கள்தான் அழகானவை. அந்த சூழலை வர்ணித்திருக்கும் விதமும், அங்கே அவர்களின் இனிமையான வாழ்க்கையும் ஒரு சொர்க்கமாகவே காட்டப்பட்டிருக்கின்றன. பாண்டுவின் மரணம்கூட மிக அழகான ஒரு பூஞ்சோலையில்தான் நடக்கிறது. சதசிருங்கத்திலிருந்து அவர்கள் செல்லும் இடங்களெல்லாம்கூட மேலும் அழகானவையாகவே உள்ளன.

ரா.குமாரசாமி