Sunday, August 2, 2020

முடிவு



அன்புள்ள எழுத்தாளார் ஜெயமோகன் அவர்களுக்கு

 வணக்கம்

தங்களின் வெண்முரசு நாவலை தொடர்ந்து படித்து கொண்டு வருகிறேன் .அதில் வாசகர்களுக்கு கிடைக்கும் ஆனந்தத்தையும் ,அமைதியையும் யாவராலும் புரிந்து கொள்ள முடியாது .மஹாபாரதத்தை இவ்வளவு விரிவாக எழுதியதற்கு கோடானு கோடி நன்றி.ஆனாலும் தங்களின் ஒரு வாசகனாக பணிவான வேண்டுகோள் .நான் ராஜாஜி அவர்கள் எழுதிய சக்கரவர்த்தி திருமகன் என்ற ராமாயணம் ,மற்றும் சில மஹாபாரத கதைகளை படித்திருக்கிறேன்.அதனால் தான் இந்த விண்ணப்பம்.பிழையிருந்தால் என் கருத்துக்களை ஒதுக்கி விடுங்கள் .

பல மஹாபாரத கதை முடிவில் பாண்டவர்கள் அனைவரும் இறக்க தருமர் மட்டும் உயிருடன் இந்திரனின் தேரில் முதலில் நரகம் செல்வது போலவும் ,அங்கு பாண்டவர்கள் ,கர்ணன் ,துரியோதனன் ஆகியோர் குரல்களை கேட்ப்பதாகவும் வரும் .பின்பு காட்சிகள் மாறி சுவர்க்கத்தில் துரியோதனன் ,கர்ணன் ,சகுனி ,பீஷ்மர் ,துரோணர் ,குந்தி ,விதுரர் மற்றும் துரியோதனன் தம்பியர் அனைவருடன் சந்தோசமாக பேசுவதாகவும் காட்சிகள் விரியும் .பின்பு யமன் மூலமாக இறந்தவர்கள் அனைவரும் விருப்பு வெறுப்புகள் இன்றி வாழும் இந்த நிலை தான் உண்மை என்ற நியதியை சொல்லி மஹாபாரதம் நிறைவு அடையும் .

நான் உங்களை வற்புறுத்த முடியாது .நான் இவைகளையும் தாங்கள் நாரதர் சொன்னது போல விவரிப்பீர்கள் என எதிர்பார்த்தேன் .அதன் மூலம் அடுத்த மாதம் கோகுலாஷ்டமி அன்று வெண்முரசு முடிவடையும் என நினைத்தேன்.இதனை உங்களுக்கு சொல்ல விரும்பியதால் இதனை எழுதுகிறேன் .  1988   வருடத்திலே மஹாபாரத கதையை எட்டு மணி நேரம் பலருக்கும் சொல்லியிருக்கிறேன் .அதனால் தான் இந்த விண்ணப்பம் .

இப்படிக்கு
தி செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்


அன்புள்ள செந்தில்

ஒவ்வொரு மகாபாரதத்திற்கும் அதன் சாராம்சம் சார்ந்த சிறிய மாறுபாடுகள் உள்ளன. வெண்முரசு மகாபாரதத்தில் இருந்து ஒரு வேதாந்த வடிவை உருவாக்குகிறது. அதற்கேற்பவே கதை சொல்லப்பட்டுள்ளது

ஜெ