Saturday, August 1, 2020

கண்ணன் கதை


அன்புள்ள ஜெ

வெண்முரசை கண்ணன் காவியம் என்றே சொல்லிவிடலாம். இந்நாவலில் கண்ணனின் பல முகங்கள் அடுக்குஅடுக்காக ஒன்றின் மேல் ஒன்றாக உள்ளன. எத்தனை கண்ணன்கள். நீலம்,இந்திரநீலம்,பன்னிரு படைக்களம், குருதிச்சாரல்,இமைக்கணம்,கல்பொருசிறுநுரை ஆகிய ஆறுநாவல்களில் அவர்தான் கதைநாயகன். நீலத்தில் குழந்தை, இந்திரநீலத்தில் காதலன், பன்னிரு படைக்களத்தில் காக்கும்நாயகன், குருதிச்சாரலில் பார்த்த சாரதி, இமைக்கணத்தில் கீதாச்சாரியன், கல்பொருசிறுநுரையில் யோகி என எல்லா முகங்களும் வந்துகொண்டே இருக்கின்றன.

கிருஷ்ணனின் குலக்கதையில் தொடங்குகிறது.யாதவ வம்சம், லவணகுலத்து மரீஷையின் வம்சம் முதல் கடைசியில் கிருஷ்ணனின் ரத்தம் அழிந்து அவருடைய சாராம்சம் எஞ்சுவதுவரை ஒரு நீண்ட ஹரிவம்சகதையாகவே வெண்முரசு உள்ளது

எல்.நரசிம்மன்