Monday, August 3, 2020

சுஃப்ரை


அன்புள்ள ஜெ

வெண்முரசில் வந்துசென்ற நூற்றுக்கணக்கான சின்ன கதாபாத்திரங்களை நினைத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் வியாசர் சொன்னதுபோல காவியத்தின் அடித்தட்டுக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால் ஒரு வாசகன் அவர்களை அங்கே கண்டுபிடித்துக்கொண்டேதான் இருப்பான்.

வெண்முரசில் எனக்குபிடித்த கதாபாத்திரம் திருஷ்டதுய்ம்னனின் மனைவியாக கணையாழியைப் பெற்ற பரத்தையான சுஃப்ரை. அவளுடைய பெயருக்கு தூய்மையானவள் என்றும் வெண்மையானவள் என்றும் அர்த்தம். அவள் பரத்தைதான். ஆனால் திருஷ்டத்துய்ம்னனிடம் உண்மையான காதல்கொண்டுவிட்டாள். ஆகவே அவனிடம் அவளுடைய ஆணவம் எழுகிறது. சாக தயாராகிறாள். ஆனால் ஆணவத்தை கைவிடவே இல்லை. அதுதான் காதல். அந்தக்காதலை அவன் கைவிடவில்லை. அவளுக்கு அவன் கணையாழியை அளிப்பது அதனால்தான்

விசித்திரமான கதாபாத்திரம். ஒரு நவீன நாவலில் வரக்கூடிய கதாபாத்திரம். ஆனால் வெண்முரசின் விரிவான களம் எல்லா கதைகளையும் உள்ளே அடக்கிக்கொள்கிறது

ஆர்.ராஜ்குமார்