Wednesday, March 28, 2018

நரகம்



அன்புள்ள ஜெ

இன்றைய இமைக்கணத்தை வாசித்தபோது விந்தையான ஓர் உணர்வு உருவானது. சாவின் வலி நாம் அறிந்தது. சாவின்மையின் வலி மிக சிக்கலான ஒரு கற்பனை. இருந்துகொண்டிருப்பதே வலி என்றாவது. நோய்களில் முதன்மையானது இருத்தலின் நோய் என சார்த்ர் நாஸியா வில் ஒருவரி சொல்வார். அதை நினைத்துக்கொண்டேன். சார்த்ர் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தார். நோ எக்ஸிட் நாவலில் நரகம் வரும். அதில் முடிவின்மையே நரகம் என்று தெரியும். இன்னும் எத்தனைகாலம் என்று கேட்டு முடிவிலி வரை என்று தெரிந்து அலறும் மக்களை யமலோகத்தில் பார்க்கையில் அதை ஒப்பிட்டுக்கொண்டேன்

சந்திரா