Tuesday, March 27, 2018

முதற்கனல்



அன்புள்ள ஆசானுக்கு,

வெண்முரசு முதற்கனல் வாசிக்கத்  துவங்கி இருக்கிறேன். வெண்முரசின் முதற்பகுதி முதற்கனல் மட்டும் என் வாழ்நாள் முழுவதற்கும் திரும்ப திரும்ப வாசிப்பதற்கு போதுமான நூல் ஆகும். 

சில வரிகளை வாசித்ததும் அடுத்த வரிக்கு செல்ல முடியாமல் என்னை மூழ்கடிக்கிறது. அனைத்து படிமங்களையும் முடிந்த அளவு உள் வாங்கி வாசிப்பதற்கு எப்படியும் ஒரு வருடம் ஆகும் என எண்ணுகிறேன்.

விசித்திரவீரியன் சொல்லும் ஒரு வரி "இதோ நான் இருக்கிறேன்." , இந்த ஒரு வரியில் இருந்து வெளிவரவே இரு நாட்கள் ஆனது. மீண்டும் துணிவை வரவழைத்து கொண்டு அடுத்தடுத்த வரிகளை வாசித்து வருகிறேன். முதற்கனல் என்னை எங்கோ வேறு ஒரு உலகிற்கு கொண்டு சென்று கொண்டு இருக்கிறது. 

பணிவுடன்,
ஹேமானந்த்