Friday, March 30, 2018

வினாக்கள்



அன்பிற்கினிய ஆசான் அவர்களுக்கு, 
                                           

தங்கள் நலமறிய விழைகிறேன். இன்றைய வெண்முரசு அத்தியாயம் ஒரு மகத்தான இலக்கிய உச்சம். 
              

துயரின் உச்சத்தை வாழ்நாள் எல்லாம் அனுபவித்த ஒரு மாவீரன், தன்னை ஆட்கொண்ட இழிவுகள் அத்தனையில் இருந்தும் தன்னை மீட்டுக் கொள்ளும், ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்பை, நழுவ விட்ட மகத்தான சிறுமை அது.   
              

அர்ஜுனன் அடைந்தது மகத்தான தடுமாற்றம். மெய்ம்மை அவனுக்கு உரைக்கப்பட்டது. கர்ணன் அடைந்தது மகத்தான சிறுமை. இறவாப் புகழ் அவனுக்கு கொடுக்கப்பட்டது. 
             

இருண்ட வெளியை நோக்கியபடி இருளில் மூழ்கிய கர்ணன் உலகியல் வாழ்க்கையில் சிக்கி உழலும்  ஒரு எளிய மனிதனாக சிறுத்துப் போவதன் துயரம் தாள முடியாதது. 
           

வாழ்நாள் எல்லாம் தியானிக்க வேண்டிய மகத்தான தரிசனம் இதில் உள்ளது.
                                          

தங்கள் அன்பு மாணவன்,
                                                             
இ.மாரிராஜ்