Tuesday, March 6, 2018

சப்தவாதம்



ஜெ

கௌதம சிரகாரி மீமாம்சைக்கு ஆதரவாகச் சொல்லும் வாதங்கள் தொன்மையானவை. நவீன மொழியில் உங்களால் சொல்லப்பட்டிருந்தாலும் அவர்கள் ஏறத்தாழ இதைத்தான் சொல்லியிருப்பார்களென்று ஊகிக்கலாம். அவர்களுடையதை சப்தவாதம் என்றும் பிரமாணவாதம் என்றும் சொல்வார்கள். அதாவது வானிலிருந்து வந்த சொல்லை மாற்றக்கூடாது, அப்படியே நம்பவேண்டும். அதை முதற்சொல்லாக எடுத்துக்கொண்டு அப்படியே கடைப்பிடிக்கவேண்டும். அதுமட்டுமே மனிதர்களின் கடமை. அதை விரிவாக கவிதைச்சாயலுடன் சிரகாரி சொல்கிறார். இது பழமையானதாகத் தெரியலாம். ஆனால் வேதவேள்விகளைச் சொல்பவர்கள் இன்றும் இதையே சொல்கிறார்கள் இன்றைய ஞானம் முழுக்க அன்றே நூல்களில் உள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படை இதுதான். ஆனால் மிகச்சரியாக இது இஸ்லாமிய மதநம்பிக்கைக்குத்தான் பொருந்தும் என்று தெரிகிறது. எல்லாமே வேதத்தில் உள்ளது என்று இச்லாமியரும் வேதவாதிகளும் ஒரேகுரலில் சொல்கிறார்கள் என்பது இதனால்தான்


ராமச்சந்திரன்