Saturday, June 15, 2019

சிதை



ஜெ

விருஷாலி உடன்கட்டை ஏறுவதையும் இதற்கு முன் வந்த உடன்கட்டை ஏறும் காட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். பாண்டுவுடன் மாத்ரி உடன்கட்டை ஏறுகிறாள். ஆனால் மாத்ரி கொந்தளிப்புடன் இருக்கிறாள். தன் பிள்ளைகளை குந்தியிடம் ஒப்படைக்கிராள். விருஷாலி அமைதியாக இருக்கிறாள். நிதானமாக சிதை ஏறுகிறாள்.

இரண்டுபேருக்கும் பொதுவாக ஒரு விஷயம் இருக்கிறது. இரண்டுபேருக்குமே நிறைவின்மையோ குற்றவுணர்வோ இருக்கிறது. தான் பாண்டுவுக்கு மனைவி ஆகவில்லை என மாத்ரி நினைக்கிறாள். மனைவியாக வாழாதவள் விருஷாலி. சிதையேறுவதன் வழியாக அவர்கள் அதைத் தீர்த்துக்கொள்கிறார்கள்

விருஷாலி அவளுடைய தாழ்வுணர்ச்சியால் கர்ணனை அணுகவே இல்லை. ஆகவே அவள் அந்தச் சிதையேற்றம் வழியாக அந்தக் குற்றவுணர்ச்சியை ஈடுகட்டிக்கொண்டால் எனத் தோன்றுகிறது


அர்விந்த்