Wednesday, June 12, 2019

வேள்வி




அன்புள்ள ஜெ


குருக்ஷேத்திரம் மொத்தமாக ஒரு சிதையாக ஆகும்காட்சிதான் இதுவரை வந்தவற்றிலேயே உக்கிரமான உருவகம் என்று படுகிறது. நாக்கு சிவந்த வேங்கை என்ற படிமம் முதலில் வந்தது. அதன்பின் ஓராண்டாக நூற்றுக்கணக்கான படிமங்கள் குருக்ஷேத்திரம் பற்றி வந்துவிட்டன. இனி என்ன சொல்லமுடியும் என நினைக்கும்போதே அடுத்த படிமம் வந்துவிடும். ஆனால் இத்தனைக்கும் அப்பால் இந்த மகத்தானபடிமம் வந்திருக்கிறது. இதை இனிமேல் மறக்கவே முடியாது. மாபெரும் வேள்வி. இனி இதைப்போல் ஒருவேள்வி நிகழப்போவதில்லை என்ற வரியை வாசிக்கும்போது உடனே இட்லரின் விஷவாயு அறைகளும் ஹிரோஷிமா நாகசாகியும் ஞாபகம் வந்தன.

செல்வக்குமார்