Sunday, June 16, 2019

குருதி



ஜெ

கர்ணனின் இறப்பில் அவன் குருதிவடித்தபடியே செல்லும் காட்சி கொந்தளிக்கச் செய்துவிட்டது. கடைசிவரை அந்தப்புண் இருந்துகொண்டே இருந்தது. தம்சன் என்னும் அந்த வண்டு அவனுக்குள் இருந்தது. வெய்யோனில் அந்த வண்டின் புண் பற்றி வரும் காட்சிகளை நினைத்துக்கொண்டேன். அந்த வண்டு அவன்கொண்ட ரகசியக்காதலா? எங்குமே பாஞ்சாலி என்ன நினைத்தாள் என்றே வரவில்லை. அவள் அவனுக்குள் அப்படி ஒரு ஆறாத புண்ணாக இருந்தாளா? அந்த ரத்தம் வழிவதை மறக்கவே முடியவில்லை

ஸ்ரீதர் ராம்