Friday, June 14, 2019

போர்க்களக்காட்சிகள்



ஜெ,

கிருதவர்மனின் உருமாற்றம் ஒரு பயங்கரம். ஆனால் அது ஒரு கொடூரமான குறியீடும்கூட. அவனிடம் சிகண்டி சொல்கிறார். வஞ்சம் வேண்டாம் அது உன்னை எரித்துவிடும் என்று. இந்திரநீலத்தில் அவன் ஒரு தீயால் பற்றப்படுகிறான். அது அவனுக்குள் எரிந்துகொண்டே இருந்தது. அந்த நெருப்பு இப்போது வெளியே வந்து அவனையே எரித்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் அவன் இன்னமும் அணையவில்லை.

போர்க்களக்காட்சிகள் திகைப்பூட்டும் கொடூரமான கனவுகள் போலிருந்தன.மனித உள்ளத்தின் வஞ்சத்தையும் கசப்பையும் காட்டும் அடையாளங்களாகவே நான் அவற்றைக் கண்டேன்

அர்விந்த்