Friday, June 14, 2019

முன்னை இட்ட தீ



அன்புள்ள ஜெ

குருக்ஷேத்திரமே ஒட்டுமொத்தமாகப் பற்றி எரியும் காட்சி இதற்குமுன் பலவகையில் குறிப்புணர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொன்றாக நினைத்துப்பார்த்துக்கொண்டிருக்கையில்தான் வெண்முரசின் ஒருமை என்னை ஆட்கொண்டது. திரௌபதியை நாம் முதலில் சந்திப்பதே அனலில்தான். அதற்குமுன் தீயை சுற்றி நடனமிடுகிறான் துருபதன். அதன்பின் அவள் காட்டை எரிக்கும் காட்சி. அதன்பின் காண்டவ காட்டின் எரிப்பு.

அங்கிருந்து முன்னால் சென்றால் முதல்நாவலின் பெயரே திகைப்பூட்டியது. முதற்கனல். முன்னை இட்டதீ முப்புரத்திலே என்பதுபோல அதுதான் தொடக்கம். சிதையேறும் அம்பையிலிருந்துதான் எல்லாம் ஆரம்பிக்கிறது. அங்கிருந்து தீ இதுவரை வந்திருக்கிறது

எஸ்.மாதவன்