Saturday, June 15, 2019

எரிபுகுதல்



அன்புள்ள ஜெ

விருஷாலியின் பிரச்சினை அவளால் கர்ணனுக்குச் ச்மானமாக அரியணையில் அமர முடியவில்லை என்பதுதான். அவனுக்கு சமானமாக தன்னை அவளால் நினைக்கவே முடியவில்லை. சூரியனை நினைக்கும் மலர்போல தொலைவிலிந்து வழிபட்டாள். அணுகவே இல்லை.

ஆனால் சிதையில் இணையாக ஏறிப்படுத்துக்கொள்கிறாள். எந்த தயக்கமும் இல்லை. இந்த அரியணை இன்னும் மகத்தானது. பொன்னுக்குப் பதில் தீ இருக்கும் அரியணை. இதில் அவள் படுத்துக்கொள்கிறாள். இங்கே அவனுக்குச் சமனாமக இருக்கிறாள்.

இதுதான் அவள் அடைந்த விடுதலை. அவள் இங்கே இதுவரை வாழ்க்கையில் இழந்த எல்லாவற்றையும் அடைகிறாள்  இனி கதைகளில் அவன் தேவியாக இருப்பாள்

சூரியனின் கதிர்பட்டு எரிந்து தீயாக மாறும் மலர் சூரியனை அடைந்துவிடுகிறது

சாரங்கன்