Friday, June 14, 2019

பொற்தேர்



ஜெ

கர்ணனின் பொற்தேர் உருகி பிலம் வழியாக மண்ணுக்குள் ஊறிச்சென்று மறைந்தது அழகான கவிதையுருவகம். தங்கம் பற்றி வெண்முரசில் வந்த ஏராளமான கவிதைப்படிமங்களை நினைத்துக்கொண்டேன். பிருத்வி - மண்ணில் விண்ணின் ஒளி எழுவதுதான் பொன் என்று பலமுறை வெண்முரசு சொல்கிறது. சூரியன் அல்லது மின்னலின் மண்வடிவம் அது. சூரியமைந்தன் ஏற மண்ணிலிருந்து ஒளிகொண்டு வந்தது. சூரியன் மகன் மறைந்ததும் அது மண்ணுக்கே திரும்பிவிட்டது. சூரியனை ஏந்திய பூமாதேவி என்றுதான் கர்ணனின் தேரைச் சொல்லத்தோன்றுகிறது

மகேந்திரன்