Tuesday, June 11, 2019

மகன்




அன்புள்ள ஜெ


விருஷசேனனை அப்படியே கர்ணனின் ஆல்டர் ஈகோவாகவே ஆரம்பம் முதல் காட்டிவருகிறீர்கள். அவர்கள் எழுதழலிலேயே வந்துவிட்டார்கள். கர்ணனே பல உடல்களில் பெருகியதுபோல் அவர்கள் இருக்கிறார்கள் என அப்போது வாசித்தேன். இங்கே அவன் அப்படியே கர்ணனைப்போல இருக்கிறான். கர்ணன் அர்ஜுனனின் உயிரை கொடையளித்தான். அது அன்னைக்கு கொடுத்த வாக்குறுதி. விருஷசேனன் எதையும் வாக்களிக்கவில்லை. ஆனால் தன் தந்தைக்குப் பிடிக்காது என நினைத்து அவன் சுருதகீர்த்தியைக் கொல்லாமல் விட்டுவிடுகிறான். அந்தப்பெருந்தன்மைதான் அவனை கர்ணனுக்கு பெருமைசேர்க்கும் மகனாக ஆக்குகிறது


மகாதேவன்