Tuesday, June 18, 2019

புருஷமேதம்


அன்புள்ள ஜெ

குருக்ஷேத்திரம் என்னும் மாபெரும் வேள்வியை வாசிக்க வாசிக்க மெய்சிலிர்ப்படைந்தேன். அதீதமான கற்பனை. போர் தொடங்கிய நாளிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக மேலே சென்று கொண்டிருந்தது. இன்னும் என்ன சொல்லமுடியும், இன்னும், எவ்வளவு மேலே செல்லமுடியும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில் கடைசியாக இந்த வேள்வி. இதுதான் மாபெரும் புருஷமேதம்

இந்த வேள்விக்களத்தில்தான் கீதை உரைக்கப்பட்டது. கீதைக்கான வேள்வி இது. கீதை ஓத எரிந்த எரி. அது மனிதர்களை ஸமித்தாக்கி குருதியை நெய்யாக்கித்தானே எழுப்பப்படமுடியும்?

ஸ்வாமி