Monday, June 17, 2019

நட்பு


அன்புள்ள ஜெ

கர்ணனின் எரியூட்டலின்போது துரியோதனன் கடைசிவரை உடனிருக்கிறான். அற்புதமான ஒரு இடம் அது. அதற்கு முன்னோடியான காட்சி என்பது துரியோதனன் உடல்நலம் குன்றி துயரில் தூங்கிக்கொண்டிருந்தபோது ராத்திரி முழுக்க உடனிருக்கும் கர்ணனின் காட்சி. அவர்கள் நடுவே இருக்கும் அந்த நட்பை நினைக்க நினைக்க நெஞ்சம் விம்முகிறது.


வெண்முரசு மகாபாரதத்தின் அடிப்படை உனர்ச்சிகளை பொய்யாக்கவில்லை. அதையெல்லாம் இன்றைய வாழ்க்கையில் வைத்து மறுகண்டுபிடிப்பு செய்கிறது. இது ஒருமுக்கியமான விஷயம் என நினைக்கிரேன். நவீன இலக்கியங்கள் எப்போதுமே மகாபாரதம்போன்ற கிளாஸிக்குகளை தலைகீழாகவே காட்டுகின்றன. வெண்முரசு அதிலிருந்து மேலே எழமுயல்கிறது. இது நவீனத்துவப்படைப்பு அல்ல அடுத்தகட்ட படைப்பு


எஸ்.சரவணன்