Friday, August 4, 2017

தளை



அன்பு ஜெமோ  சார்,

        அன்னை என்பதும் ஒரு தளையே.இயங்க முடியாத காயாக வாளாயிருக்க வேண்டியுள்ளது.மகளாகிய கன்னியின் ஆற்றல் விசையை பன்னிரு படைக்களத்திலேயே நன்றுணர்ந்தவரல்லவா தருமர்.எனவே நாற்கள அவையில் அக்காய் கொண்டு ஆடுகிறார்.

          செவ்விலக்கியம் சமகாலத்தையும் உள்ளடக்கியதே. கிருஷ்ணையும், உத்தரையும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சமகால பெண் குழந்தைகளேதான்.

இரா.சிவமீனாட்சிசெல்லையா.