Sunday, August 2, 2020

விண்ணுலகம்-2


அன்புள்ள ஜெ

ஒரு வாசகர் பாண்டவர்கள் விண்ணுலகம் போவதைப் பற்றி எழுதியிருந்தார். அது நல்ல கடிதம். உண்மையில் பாண்டவர்களின் விண்ணுலகப் பயணம் இந்நாவலில் மிக அழகாக புதியமுறையில் சொல்லப்பட்டிருந்தது. இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விண்ணுலகத்தையே அடைகிறார்கள்.

யுதிஷ்டிரர் ஒரு விண்ணுலகை அடைகிறார். அங்கே ஐந்து தம்பிகளும் சொந்தங்களும் வேண்டும் என நினைக்கிறார். ஆகவே அங்கே அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் சொர்க்கம் அப்படி இருக்கவேண்டும், அதில் யுதிஷ்டிரர் இருக்கவேண்டும் என்றில்லை. பீமன் ‘மாமலரி’ல் ஞானத்துக்குப் பதிலாக காதலை தேடி அடைந்தவன். அவன் அதைத்தான் பெற்றுக்கொள்கிறான். அதிகாரத்தை உதறியதும் திரௌபதியும் காதலே முக்தி என நினைக்கிறாள். அப்படி ஐந்து சொர்க்கங்களை அவர்கள் அடைகிறார்கள்.

அவரவர் சொர்க்கம் அவரவருக்கு. சொர்க்கம் என்பது அவர்கள் அடையும் உன்னத நிலையே ஒழிய ஓர் இடம் அல்ல. ஒரு யோக உச்சம் என்கிறார். இருக்கலாம் ஆனால் அது அவர்களின் பெர்சனாலிட்டியின் ஒரு zenith. அவர்கள் சென்றடையும் ஒரு sublime. அதுதான் வெண்முரசு தரும் முடிவு

கே.எஸ்.ஜெயபாலன்