Sunday, August 2, 2020

உரையாடல்



அன்புள்ள ஜெ
    

வெண்முரசில் நான்  வாசித்த பகுதி குறைவுதான் என்றாலும் :

அறிவியல் சார்ந்து பிரபஞ்சம் அறிமுகமாவதற்கு முன் புராணம் சார்ந்து அது அறிமுகமான தலைமுறையை சார்த்தவன்தான் நான் அறிவியல் கற்றபின்பும் பாலியத்தில் புராண உளவியலுடன் உலவிய தருணங்கள் இன்றும் நினைவில் உள்ளது .என் தலைமுறைக்கு இப்படியிருக்கையில் உங்களுக்கு அதன் ஆழமான  நினைவுகள் இருக்கும் , மேற்கின் சமூக உளவியல்   சிந்தனை துணையுடன் அது பிரவாகமாக வடிந்திருப்பதாகவே தோன்றுகிறது .

ஹோமரின் சிந்தனை தடம் பதிந்த நிலத்தில் இருந்து  திருதுராஸ்டிரன் குறித்து நீங்கள் சிந்தித்திருப்பீர்கள் வெண்முரசில் சில   அத்தியாயங்கள் எழுதியிருப்பீர்கள் இந்த நினைவு வருகையில் , ஹெக்டரின் தந்தையுடன் திருதுராஷ்டிரனை ஒப்பிட்டு வாசித்த நினைவும் வருகையில் ஒரு தனித்துவமான உணர்வு  எழுகிறது  .
நவீன இலக்கியத்தை வாசிக்காத பலர் வெண்முரசு வாசிக்கிறார்கள், ஜூம் விவாதத்தில் பாரதத்தை விஞ்ஞான வடிவில் எழுத முடியும் என்று சொன்னிர்கள் அப்படி எழுதினால் இந்த வாசகர்கள் எப்படி அணுகுவார்கள் என்று நினைக்கிறீர்கள் .

பாலைவனத்தில் புள் முளைத்த தருணத்தை சொன்ன வாசகர் தன் வாழ்வின் வெண்முரசு அனுபவ தருணத்தை பற்றி சொன்னார் அப்பொழுது இப்படி தோன்றியது , அந்த வடிவத்தில் புனைவு உருவாக்கும் சத்தியம் உள்ளதா (சாத்தியமாகியுள்ளது )

வெண்முரசு நாவலின் வாசகர் ஒருவர் நாவலின் ஒரு குறிப்பிட்ட தருணத்திற்கு சென்று தான் விரும்பும் கதாபாத்திரத்துடன் ஒரு உரையாடலை நிகழ்த்துவது அல்லது வாசகரின் வாழ்வின் தருணங்க்ளின் ஒரு கதாபாத்திரம் தொடர் உரையாடலில் இருப்பது என்ற வடிவத்தில் ஒரு எழுத்தாளரின் வாசகர்கள் அல்லது ஒரு நாவலின் வாசகர்கள் என்று மைய கதாபாத்திரங்களை நிறுவி இயங்கும் ஒரு நாவல் முயற்சி நடந்துள்ளதா

உங்கள் அறிமுகத்தால் கோவை ஞானி அவர்களை சிறிது வாசித்திருக்கிறேன் . அவர் உரையாட விரும்பும் ஆர்வமும் அதன் பொருட்டு அவசியம் அற்றவை என்று சிலவற்றை தவித்துவிட்டு  அவர் எழுத்தில் வெளிப்படும் நிதானமும் ஆச்சரியப்பட தக்கது. .அனால் அவருக்கு எல்லாமே மார்க்சிசமாக  படுகிறது என்று நினைக்கிறேன் .  மார்க்ஸின்  ''மாற்றியமைத்தல் ''என்ற சிந்தனை முதலாளித்துவ
காலத்திற்குத்தான் பொருந்தும் . தொழில் புரட்சி சார்த்த உற்பத்தியிலில்தான் மனிதனுக்கு உற்பத்தித்தி மீது ''முழு'' கட்டுப்பாடு உள்ளதாக கருதுகிறேன்

அன்னாருக்கு அஞ்சலி .

தட்சிணாமூர்த்தி


அன்புள்ள தட்சிணாமூர்த்தி

ஒரு நாவல் எழுதப்படும்போதே தொடர் உரையாடலும் இருப்பதென்பது இந்த மின்னூடக காலகட்டத்திலேயே இயல்வது. முன்பு இது நடந்ததில்லை என நினைக்கிறேன்
ஜெ