Friday, June 1, 2018

கதைகளுக்குள் கதை




அன்புள்ள ஜெ

வெண்முரசின் கதைகளுக்குள் கதைகளுக்குள்  என்று சென்றுகொண்டே இருக்கிறேன். இந்த அனுபவம் கடந்த நான்கு ஆண்டுகளாக அனேகமாக ஒவ்வொரு நாளும் நிகழ்கிறது என்பது நினைத்துப்பார்க்கவே அபூர்வமான நிகழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் இத்தனைபெரிய ஒரு படைப்பு எழுதப்படும் அதை இத்தனைபேர் இப்படி வாசிப்பார்கள் என்பதெல்லாம் எவரும் நம்பமுடியாத நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். நான் இதற்குமுன்னால் இதேபோல பெரிய நாவல் என எதையுமே வாசித்ததில்லை. இந்த பெரிய நாவல் மன ஓட்டங்களையும்  தத்துவ நுட்பங்களையும் கவிதையையும் நிறைத்து வைத்திருந்தாலும்கூட இப்படி வாசிக்கவைப்பது ஆச்சரியமானதுதான்

ராஜேந்திரன்