Monday, June 15, 2015

நிமிர்வு

ஆசிரியருக்கு ,

பாமையின் நிமிர்வு இன்று தெளிவாகிறது , இவள் அம்பைக்கும் , திரௌபதிக்கும் நிகர்த்தவள், குலத்தால் ஒரு படி கீழ் ஆதலால் ஒரு படி உயர்ந்தவள். மன்றில் வந்து நின்று பேசும் சமனை யாதவ குலம் பெண்களுக்கு வழங்கியதாலேயே அவர்கள் பேரரசை கட்ட ஆற்றல் கொண்டவர்கள்.    

பாமை பூ தொடுத்துக் கொண்டிருக்கும் காட்சியும் , கலங்களின் பாய் தாழ்தல் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே வாடும் பூ போன்ற வர்ணனையும் , அபாரம்.   

துவாரகை பாமையின் கனவு. 

கிருஷ்ணன்.