Sunday, June 21, 2015

இருளின் ஏழு நிறங்கள்

சிரியருக்கு ,

ஒளிமிக்க அந்த ஏழடிகளுக்கு எதிர்புறம் பிரிதிபலிக்கும் நிழல் பிம்பமாக இன்றைய பகுதியை எதிர்பார்க்க வில்லை. ஓளி பிரிக்கப் படும் ஏழு நிறங்கள் கிருஷ்ணனை நோக்கிய பாமையின் ஏழடிகள் என்றால் இருள் பிரிக்கப் படும் நிறங்கள் பாமையை நோக்கிய சிசுபாலனுடையது. முந்தையது பறத்தல் என்றால் இன்றையது ஆழ்தல்.   

பழியால், வஞ்சத்தால் , காமத்தால் , பொறாமையால் முக்தியடைந்தோர் உண்டு, அவ்வரிசையில் சிசுபாலன் அபாரம்.

வரும் காட்சியை கண்டுவிட்டேன், சிசுபாலன் திரும்பச் செல்லும் காட்சியை கற்பனை செய்கிறேன். 

கிருஷ்ணன்.