Saturday, June 13, 2015

விஸ்வரூபம்

ஆசிரியருக்கு ,

இந்திரநீலம் துவங்கிய முதலே இயல்பில் அதிலொரு ஒருமை இருப்பதை நாம் காணலாம் , முதலில் தன்னைச் சுற்றி அழகிய  ஆண்களை கொண்டுள்ள திரௌபதி , அதன் பின் அதேபோன்று துவாரகையில் பென்னழகில் திளைக்கும் திருஷ்டத்தும்னன்.

பாமையின் அங்க அழகை மேலிருந்து கீழாக வர்ணித்து , இப்போது கிருஷ்ணனின் விஸ்வரூபத்தை பாதம் முதல் முடி வரை.

கிருஷ்ணன் ஆடியான களத்தில்  உண்மையில் பாமை தான் விஸ்வரூபம் எடுக்கிறாள் , பாமை வழி  உண்மையில் பெண்மை தான் விஸ்வரூபம் எடுக்கிறது ,  பெண்மை வழி உண்மையில் கண்ணிமை தான் விஸ்வரூபம் எடுக்கிறது. கவித்துவமும்  தரிசனமும் மோதிச் சிரிக்கும் விளையாடல் இந்திர நீலம்.   

கண்ணைப் பறிக்கும், சித்தம் பற்றும் இன்றைய பகுதி எழுதப் பட்ட எந்த எழுத்துக்கும் நிகரானது. 

கிருஷ்ணன்.