அன்புள்ள சார்,
வெண்முரசு முடியப்போகிறது என்ற பதட்டத்திலிருந்து, முடிந்தேவிட்டது என்னும் உண்மை புரிய சில நாட்கள் தேவைப்பட்டது. கப்
சிவகாமியின் சபதம் தொடராக வந்த போது என் தந்தை அவற்றை பேப்பர் கட்டிங்காக எடுத்து வைத்ததையும் ஒரு இதழ் கூட தவறாமல் வாசித்ததையும் ஒருவித சாதனை புன்னகையோடு பகிர்த்துக்கொள்வார், ஆனால் அதை விட பல மடங்கு மகத்தான ஒரு படைப்பை ஏழு வருடம் பின்தொடர்ந்ததை, இப்போது உயிருடன் இருந்திருந்தால் அறிந்து மகிழ்ந்திருப்பார். போரும்  அமைதியும் வெளிவந்த காலத்திலேயே அதை வாசித்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
பெரும் முயற்சிகளையும், சாதனைகளையும்  சமகாலத்திலேயே அறிந்து அவற்றை பின்தொடர்தல்  என்பதும் ஒரு வரம் தான், ஏனென்றால் அவை தலைமுறைதோறும் நிகழ்வதில்லை,  என் தந்தைக்கு சிவகாமியின் சபதம் மட்டுமே இருந்தது (இது வெண்முரசுவுடனான ஒப்பீடல்ல, என் தந்தையின் அதிகபட்ச சாதனை) அந்த நான்கு  புத்தகங்களையும் பள்ளி படிக்கும்போதே ஒரே வாரத்தில் படித்து முடித்தேன் ஆனால் என் மகளிடம் சொல்வதற்கு மிக பிரமாண்டமான ஓன்று உள்ளது அவள் தலைமுறையில் நிகழ வாய்ப்பற்ற ஓன்று. இனி அதை புத்தகங்களாக வாங்கி அவளுக்காக சேர்க்கவேண்டும்.
வெண்முரசு எனக்கு என்ன அளித்தது என்று என்னால் இன்னும் சரியாய் புரிந்துகொள்ள முடியவில்லை அது உள்ளேயே இருந்து முளைக்கும்போது தான் தெரியும் போலும். உடனடியாக தெரிவது இரண்டு விஷயங்கள். ஒன்றை மேலே கூறிவிட்டேன். பைபிளில் வரும் இயேசுவின் மகத்தான போதனைகளில் என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் ஓன்று உண்டு "தீர்ப்பிடாதீர்கள்". 
திட்டவட்டமாக எழுதப்பட்ட பத்து கட்டளைகளை கொண்ட ஒரு சமூகத்தில் அதை மீண்டும் முன்வைக்கும் இயேசு, விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை "நானும் தீர்ப்
மாபெரும் மனிதர்களை கொண்டே கட்டமைக்கபட்ட மகாபாரதத்தில், அவர்களின் மேன்மைக்கு நிகராகவே 
அன்புடன்,
ஆல்வின் அமல்ராஜ்

