Friday, July 24, 2020

ஒற்றைச்சொல்


அன்புள்ள ஜெ,

இன்றுடன் எங்கள் வெண்முரசு வாழ்வு முடிவடைகிறது. நன்றி என்ற ஒற்றை சொல்லைத் தவிர வேறு என்ன தர இயலும் எங்களால்?

நான் ஓர் எளிய, இலக்கிய வாசகன். படிமங்களும், நுணுக்கங்களும் பெரும்பாலும் என் தலைக்கு வெகு உயரே செல்வன. இலக்கியம் தரும் நிகர் வாழ்க்கை அனுபவமே என்னை தொடர் வாசகனாக இருக்க வைக்கிறது. வந்தியத்தேவனுடன் பயணிப்பது, ஹவர்ட் ரோஆர்க்குடன் பணி செய்வது, சோனா நதியில் நீராடி விஷ்ணுபுரத்தின் மகாசபை விவாதங்களை பார்ப்பது

என்று பல அனுபவங்களை இலக்கியமே கொடுத்திருக்கிறது. என் சிறிய வாழ்விற்குள் முடிவிலி வரை பல வாழ்க்கைகள்.

இவற்றுடன் வெண்முரசு அளித்த நிகர் வாழ்க்கையும் என்றும் என்னுள் இருக்கும்.

நன்றி

டி.கார்த்திகேயன்