Friday, July 24, 2020

நீலம் முதல்


அன்புள்ள ஜெ

வெண்முரசை முடித்ததுமே பலர் முதற்கனலை தொட்டு தொடங்குவதை காணமுடிகிறது. என் வாசிப்பு என்பது மீண்டும் நீலத்தை வாசிப்பதுதான். நீங்களும் அதை உத்தேசித்தே முடித்திருக்கிறீர்கள். நீலம்தான் வென்முரசின் சாராம்சமான பகுதி. அதிலுள்ள வரிகளின் அழகை அப்போது ரசிக்கமுடியாதவர்கள் கூட இப்போது ரசிக்கமுடியுமென நினைக்கிறேன்.

நீலத்தில் கண்ணனின் பிறப்பும் அவனுடைய போராட்டங்களும் லீலைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. கிருஷ்ணாவதாரத்தின் அழகை புரிந்துகொண்டபின்னர் முதற்கனலை தொடங்குவது ஒரு நல்ல தத்துவ வாசிப்பை அளிக்கும்.

ஜெ.ராஜ்குமார்