Tuesday, July 14, 2020

வெறுமை


அன்புள்ள ஜெ

வெண்முரசில் இந்த பகுதிகளின் வெறுமை தாளமுடியாததாக உள்ளது. ஒவ்வொருவரும் இன்னொருவரில் இருந்து அகன்றுசெல்கிறார்கள். எவருக்கும் எவருடனும் எந்த உறவும் இல்லை என்பதுபோல மாறிவிடுகிறார்கள். நீர்ச்சுடரில் நீர்க்கடன் செலுத்தும்போது எவ்வளவு துக்கம் எவ்வளவு கண்ணீர். இங்கே ஒன்றுமே இல்லை. ஒரு வெறுமை மட்டும்தான். இன்னொரு உலகம் உருவாகி வந்துவிட்டது. அங்கே எல்லாவற்றையும் கையளித்துவிட்டு மௌனமாக கிளம்பிச்செல்கிறார்கள் பாண்டவர்கள். அந்த வெறுமையை எப்படி எடுத்துக்கொள்வது என்றே தெரியவில்லை.

 

ஜெயக்குமார்