Friday, July 31, 2020

அஸ்தினபுரியும் துவாரகையும்


அன்புள்ள ஜெ 

நலம்தானே? நானும் நலமே. வெண்முரசு சார்ந்து நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன். நீங்கள் வாசிக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். வாசிக்கிறீர்கள் என்பது அளிக்கும் நிறைவே போதும் என நினைக்கிறேன். 

களிற்றியானைநிரை நாவலில் அஸ்தினபுரி மீண்டெழுவதைப்பற்றி மீண்டும் சென்று வாசித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஆச்சரியமான விஷயம், களிற்றியானை நிரையில் அஸ்தினபுரி மீண்டு வருகிறது. கல்பொருசிறுநுரையில் துவாரகை அழிகிறது. எழுந்த நகரங்களுக்கு வீழ்ச்சியடையும் விருப்பமும் வீழ்ச்சியடைந்தவற்றுக்கு எழுந்துவரும் விருப்பமும் உள்ளது என்று நினைத்துக்கொண்டேன்

 

அ.சரவணன்