Monday, October 31, 2016

காலபைரவ வழிபாடு


ஜெ


வட இந்தியாவில் காலபைரவ வழிபாடு மிகவும்ம் ப்ரஸித்தம். நான் பலமுறை அந்த ஆலயங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறேன். ஆனால் காலபைரவம் இப்படி ஒரு விரிவான பௌராணிக ஆழம் உடையது என்று எனக்குத்தெரியாது. சிவாம்ஸம் என்று தெரியும். ஆனால் இது ஒரு தனி மதம், பின்னாடி சிவமதத்தில் இணைந்தது என்று தெரியாது. காலபைரவனின் கொடுமையான தோற்றம் எனக்கு  பயத்தைத்தான் அளித்துவந்தது. ஆனால் இன்றைக்கு அது மகாகாலத்தின் ஒர வடிவமாகத் தெரிகிறது., மிகப்பெரிய ஒரு மன எழுச்சியை அடைந்தேன்

காலபைரவனுக்கு கொடுக்கப்பட்டுள்ல ஒவ்வொரு அடையாளமும் அற்புதம். நிறையாத மண்டை. அது படைப்புக்கடவுளின் மண்டை. ஆகவே அதிலே அவன் படைத்த உலகத்தையே போட்டாலும் நிரம்பாது. அதில் தன்னை அவன் பெய்து நிறைக்கும்போதுதான் அது நிறைகிரது. அவனை ஒரு பக்கம் விசுவாசமான நாய் தொடர்கிரது. அது காலம். இன்னொரு பக்கம் பழி தொடர்கிறது. அவன் அனல் வடிவமானவன் கங்கைக்கரையில் குளிர்ந்து விடுதலை அடைகிறான்

பலமுறை அந்த அத்தியாயத்தை வாசித்தேன்.

ஹரிஹரசுதன்

 http://www.tantrikstudies.org/blog/2015/12/20/the-divine-name-bhairava-tantraaloka-195-100http://www.tantrikstudies.org/blog/2015/12/20/the-divine-name-bhairava-tantraaloka-195-100