Monday, October 31, 2016

இரு நிலவு



ஜெ

எங்கள் யோகவகுப்பில் ஒருமுறை பேசும்போது குரு இருநிலவுகள் எழுவதைப்பற்றிச் சொன்னார். இருட்டில் இரண்டு நிலவுகள் எழுந்துவரும் என்னும் காட்சி ஒரு மாயக்காட்சியாகவே தெரிந்தது

அது மிகவும் பழைமையான ஒரு ஆர்க்கிடைப் என்று இப்போது இதை வாசிக்கையில்தான் தெரிந்தது. ஆர்க்கிடைப் ஆக அப்படியே வைத்துக்கொண்டே அதை அற்புதமாக நடைமுறை சார்ந்தும் விளக்கியிருக்கிறீர்கள்.

பலவகையிலே கூர்ந்து வாசிக்கவேண்டிய அத்தியாயம். இருநிலவுகளில் ஒன்று தர்க்கம் ஒன்று கற்பனை. இவனுக்குக் கற்பனை மட்டும்தான் இருக்கிறது

அது நிலவின் நீர் நிழல். ஆடிக்கொண்டே இருக்கிறது. இவன் தான் பிற்பாடு வியாசரின் மாணவராக ஆகி மகாபாரதத்தில் பெரும்பகுதியை எழுதிச்சேர்க்கப்போகிறான் இல்லையா?


எஸ்.ஆர்