Sunday, October 30, 2016

இருள்வேழம்




ஜெ

வெண்முரசின் ஒரு துணைத்தலைப்பு இருள்வேழம். அப்போதே அந்தச்சொல் என்னை தொடர்ந்து வந்தது. நூற்றுக்கணக்கான முறை அதைச் சொல்லியிருப்பேன். நான் ரிக்கில் வேலைபார்க்கிறேன். இரவிலே மேலே போய் நின்றால் கடல்மேல் இருக்கும் இருட்டைப்பார்க்கமுடியும். அப்படிப்பட்ட இருட்டு மண்ணிலே இருக்காது. ஏதாவது வெளிச்சம் இருக்கும். அந்த வானத்தைப்பார்க்கும்போது இருள்வேழம் என்ரு சொல்லிக்கொண்டே இருப்பேன்

அந்த இருட்டு எட்டுத்திசையானைகளாக் ஆகி அவனைச்சூழ்ந்துகொள்ளும் இடம் மெய்சிலிர்க்கவைத்தது.கண்ணுக்கு மிக அருகே அந்த யானையின் இருட்டு விரிசல்களாக தோலாக தெரிவது ஒரு சைக்கடெலிக் ஆன அனுபவம். அந்த அத்தியாயமே மண்டையை தெறிக்கவைத்தது. இனிமேல் கஜசம்ஹார மூர்த்தி சிலையை ஏறெடுத்துப்பார்க்க என்னால் முடியுமா என்றே தெரியவில்லை

பிரபாகர் எஸ்