Friday, October 21, 2016

கரி

 
 
சார் , 
 
கிராதம் கரிபிளந்தெழல் 1 படிச்சுட்டேன் , ரொம்ப நல்லா இருக்கு.கொஞ்சம் கழிந்து நான் புரிந்து கொண்டதை உங்களுக்கு எழுதறேன் சார் .  இப்போதைக்கு நான் புரிந்துகொண்டது .

வைசம்பாயனன் பிரம்மத்தை தானாக உணர்பவன் , பிச்சாடனர் தன்னையே சிவமாக நினைப்பவர் . இரண்டும் இரு எல்லைகள், அர்த்தம் ஒன்றாயினும் .

தன்னையே சிவமாக நினைப்பவனுக்கு வெளியில் ( புறத்தில் ) என்று எதுவுமில்லை . அதலால்தால்தான் ஊனை வெறுக்காது உட்கொள்ள முடிகிறது .

வைசம்பாயனன் கனவு தன்னையே அவியாக்குதல் , அதிலிருந்து அனலை உட்கொள்ளும் கொற்றவை , அதிலிருந்து உருத்திரன.

பெருச்சாளி( அல்லது ஆடு ) என்பது தான்தான் , அந்த உணர்வுதான் அவனை துன்ப படவைக்கிறது .

அவன் எப்படி துன்பத்தை வெல்கிறான் என இப்ப எனக்கு சரியா கிளிக் ஆகல :))

ஆனா முக்கியமான வித்யாசம் இந்த பிச்சாடனரின் வேள்வி என்பது உணவு உட்கொள்ளமட்டுமே , இதிலிருந்து வேள்விகள் வளர்ந்து பூதவேள்வி போன்றவற்றிக்கு செல்கிறது ( இவன் தந்தை செயயும் வேள்வி அப்போதைய உரையாடல்கள், வேட இயல்பு )


இன்னொருமுறை படித்து புரிந்து அப்பறம் சரியா சொல்ல முயல்கிறேன் சார் .
 
ராதாகிருஷ்ணன்