Thursday, October 27, 2016

கரியுரித்தல்




ஜெ

இன்றைய கரியுரித்தல் என் மனசுக்குள் விஸ்வரூபமாக ஆகியது. உங்களுக்கு என ஒரு பாணி இருக்கிறது. கரியுரித்தல் என தலைப்பை வைத்துவிட்டீர்கள். ஆகவே அதை பயங்கரமாகச் சொல்லப்போகிறீர்கள் என நினைத்தேன். மனதில் அது பெருகிக்கொண்டே இருந்தது. அதற்கேற்ப பைரவர் தோன்றுவதை எல்லாம் பிரம்மாண்டமாகச் சொல்லிவிட்டீர்கள்

ஆனால் கரியுரித்தலை அதன் அர்த்தங்களை மட்டும் சொல்லி வாசகரின் கற்பனைக்கே விட்டுவிட்டீர்கள். முதலில் திடுக்கிடலாக இருந்தது. ஆனால் வாசித்து முடித்ததுமே கற்பனையில் வளரத்தொடங்கிவிட்டது. சொல்லியிருந்தால் இத்தனை வளர்ந்திருக்காது

இதேதான் பாஞ்சாலி சபதம். அங்கே பீமனும் பிறரும் சபதம் எடுத்தபின் பாஞ்சாலியும் சபதம்போட்டிருந்தால் முதலில் ஒரு எழுச்சியும் பிரகு சரிவும்தான் வந்திருக்கும். அதைநோக்கிக் கொண்டுசென்று அதை ஊகிக்கவிட்டுவிட்டது என் மனதிலே இன்றுவரை அது வளரவழிவகுத்தது

மகாலிங்கம் ஆர்