Sunday, October 30, 2016

கர்ணனின் கதை



அன்புள்ள ஜெமோ,

இப்போதுதான் வெய்யோன் வாசித்துமுடித்தேன். கட்டற்றுப்பரவும் ஒரு தொகுப்பு போல இருக்கிறது. உங்கள் மற்றநாவல்களில் இருந்த ஒரு ஒத்திசைவு அதில் இல்லை. ஆனால் எனக்கு அது ஒரு பெரிய சவாலக இருந்தது. அதை ஒன்றாகத்தொகுத்தும் இணைத்தும் புரிந்துகொள்வதற்கான ஒரு பயிற்சியை நான் மேற்கொண்டேன்

உதாரணமாக அந்நாவலின் தீர்க்கதமஸின் கதை. ஜீரணிக்கவே முடியாத காமமும் சுயநலமும். ஆனால் அது கர்ணனின் கதைக்கு ஒரு பெரிய எதிர்ப்பக்கம். சுயநலமே இல்லாதவனி கதைக்குள் அது ஏன் வருகிறது?

அதேபோல நாகர்கலின் கதை. அவர்களின் வேதமும் மற்ற விஷயங்களும் நேரடியாகவே கர்ணனின் கதைக்குள் இடம்பெற்றாலும் தீர்க்கதமஸின் சுயநலம் கலந்த கதையுடன் அவை மிகவும் கூர்மையாக இணைந்துகொள்கின்றன

ரங்கராஜன்