Sunday, October 30, 2016

இருளுரு



ஜெ,


எட்டுத்திசையானைகள். எட்டு இருள்மத்தகங்கள். எழுந்த பதினாறு வெண்தந்தங்கள்.  எட்டு திசைகளும் இருட்டாகி யானையாகிச் சூழ்ந்துகொள்ளும் அனுபவம். எங்கள் யோகா வகுப்பில் இதே வரியைச் சொல்லியிருக்கிறார்கள். அது ஒரு பெரிய கொடுமையான அனுபவம். சிலசமயம் அபூர்வமான சத்தங்கள் கேட்கும். சிலசமயம் கெட்டமணங்களும் இருக்கும்

வெண்முரசில் இது கதையாக வருவதனால் இது ஒரு மனம்சார்ந்த விஷயம் என்பது சிலவாசகர்களுக்கு மனதிலே பதியாமல் போய்விடுமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது

மனோகரன்