Saturday, August 1, 2020

கலியின்முன்


அவன் தீயாட்டும் சுடராட்டும் மலராட்டும் காட்டினான். கலிதேவனின் மூடிய விழிகளுக்குக் கீழே என்றும் அவன் காணும் புன்னகையை உணர்ந்தான். சுடர்கொண்டு காட்டும்போது திரௌபதியை நோக்கினான். பந்த வெளிச்சம் மேனிமென்மையில் மிளிர அவள் விழிமூடி கைகூப்பி நின்றிருந்தாள்- 

என்று முடியும் களிற்றியானை நிரை எனக்கு இப்போதும் ஆச்சரியமான முடிவு. கலிதேவனின் முன் திரௌபதி கைகூப்பி நிற்கிறாள். ஏன்? கலிதேவனின் யுகம் வருகிறது, திரௌபதியின் யுகம் முடிவுக்கு வருகிறது. அதை உணர்ந்து கைகூப்பி நிற்கிறாளா?

அப்படியென்றால் கலியின் மைந்தனாகிய துரியோதனன் அவளுக்குச் செய்த அவமதிப்பை எல்லாம் கலியுகத்தின் அவமதிப்பு என்று அவள் எடுத்துக்கொள்கிறாளா? எல்லாவற்றையும் கடந்துவிட்டாளா? அவள் ஏன் அப்போது கைகூப்புகிறாள்? மைந்தரை இழந்து நாட்டையும் ஒருவகையில் இழந்து வாழ்க்கையையே இழந்து நின்றிருப்பவள் ஏன் துரியோதனனின் தெய்வத்தின் முன் சரண் அடைகிறாள்

ஒட்டுமொத்த வெண்முரசே அந்த கலிதேவனின் கோயில்முன் கைகூப்பி நிற்பதுபோலத் தோன்றியது எனக்கு. ஏற்கமுடியாத முடிவு. ஒவ்வாமையை தொடர்ச்சியாக உருவாக்கிக்கொண்டே இருக்கிறது அந்த முடிவு

செந்தில்குமார்