வெண்முரசு விவாதங்கள்

ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்

Wednesday, August 5, 2015

அமிதையின் மீட்சி:

 
எங்களூரில் மீனாட்சி ஆச்சி என்றொரு ஆச்சி இருந்தாள். என் அப்பா அவரை எப்போதும் மீனாட்சியம்மை என்றே அழைப்பார். அப்பா வயதுள்ள அனைவருமே அவருக்கு பிள்ளைகள் தான். மக்கா என்று அவர் அழைக்கையில் என் அப்பா கனிவதைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். அப்பா மிகவும் அழுத்தமானவர்(அவரின் இளமையில்), ஊரில் யாருடனும் நின்று பேசுவதோ, ஊர் விவகாரங்களில் தலையிடுவதோ கிடையாது. ஏன் அந்த ஆச்சியிடம் மட்டும் இப்படி என்று கேட்டேன். மீனாட்சியம்மைக்கு அவர் வயதில் ஒரு மகன் இருந்திருக்க வேண்டும். 

மிக தூரதிர்ஷ்டவசமாக மிக இளவயதிலேயே அவன் இறந்துவிட்டான். கிட்டத்தட்ட அதே சமயம் அவர் கணவரும் இறந்துவிட்டார். தாங்கவே இயலாத இத்துயரங்களில் இருந்து, கணவனுமில்லாமல், இருந்த ஒரே குழந்தையுமில்லாமல், உறவென்று சாய்ந்து நிற்க யாருமில்லாமல் இருந்த கையறுநிலையிலிருந்து அவர் அசாத்தியமாக மீண்டார். ஊரின் அனைத்துக் குழந்தைகளும் அவர் குழந்தைகளாயின. என் தந்தைக்கு அவர் தாயாரிடம் கிடைக்காத அரவணைப்பு அந்த ஆச்சியிடம் கிடைத்திருக்கிறது. நானே பார்த்திருக்கிறேன், தெருவில் எந்த குழந்தை கீழே விழுந்தாலும் 'யம்மா, என் பிள்ள!' என்ற பதட்டத்தோடு அவர் அள்ளித் தூக்குவதை. நான் கல்லூரி பயில்கையில் அவர் மரணமடைந்தார். ஊரே சேர்ந்து அவருக்குச் செய்ய வேண்டிய இறுதி மரியாதைகளை மிகச் சிறப்பாகச்  செய்தது. பலர் மகன் குறை தீர்க்க மொட்டை போட்டார்கள். பல பேரன்கள், பேத்திகள் நெய்ப்பந்தம் பிடித்தார்கள்.


அமிதையின் கதை எனக்கு மீனாச்சி ஆச்சியைத் தான் நினைவு படுத்தியது. தான் இழந்த மகனை ருக்மணியில் மகளாகக் கண்ட தாய், தன் வாழ்வுக்கே பொருள் தந்தவளை மடியிலேந்தி, முலையூட்டி, சீராட்டியவள் அவளுக்காக கழு அமரவும் சித்தமானது ஒன்றும் வியப்பில்லை தான். இறுதியில் ருக்மியின் கையால் அடையும் மரணத்தையும் அவள் இதுநாள் வரை பிரிந்திருந்த மகனுடன் இணையும் நிகழ்வாக, ஆனந்தமயமான உலகுக்குச் செலவதாகக் காட்டியமை அபாரம் ஜெ. அவளை அழைத்துச் செல்லும் மகனை பீலிவிழியும், வேய்குழலோடும் கண்டதாகச் சொல்வதில் இப்பாரதமெங்கும் அன்னையர் உள்ளத்தில் அவரவர் மைந்தராக இருக்கும் ஆழ்படிமத்தைக் கன கச்சிதமாகக் கொண்டு வந்துவிட்டீர்கள். உண்மையில் மனம் நிறைந்திருக்கிறது, ருக்மணி கிருஷ்ணனை அடைந்ததால் என்பதை விட அமிதை தன் வாழ்நாள் நிறைவை அடைந்ததால்.

நெகிழ்வுடன்,
மகராஜன் அருணாச்சலம்
 

 
 
 

Posted by ஜெயமோகன் at Wednesday, August 05, 2015
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Newer Post Older Post Home

வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்

ஜெயமோகன்
View my complete profile

Blog Archive

  • ►  2020 (318)
    • ►  December (15)
    • ►  October (3)
    • ►  September (21)
    • ►  August (156)
    • ►  July (119)
    • ►  March (1)
    • ►  January (3)
  • ►  2019 (663)
    • ►  December (9)
    • ►  November (18)
    • ►  October (10)
    • ►  September (41)
    • ►  August (117)
    • ►  July (1)
    • ►  June (69)
    • ►  May (24)
    • ►  April (50)
    • ►  March (95)
    • ►  February (96)
    • ►  January (133)
  • ►  2018 (1465)
    • ►  December (88)
    • ►  November (148)
    • ►  October (124)
    • ►  September (112)
    • ►  August (107)
    • ►  July (140)
    • ►  June (136)
    • ►  May (124)
    • ►  April (148)
    • ►  March (74)
    • ►  February (129)
    • ►  January (135)
  • ►  2017 (1049)
    • ►  December (114)
    • ►  November (118)
    • ►  October (49)
    • ►  September (50)
    • ►  August (117)
    • ►  July (64)
    • ►  June (66)
    • ►  May (85)
    • ►  April (52)
    • ►  March (109)
    • ►  February (112)
    • ►  January (113)
  • ►  2016 (1269)
    • ►  December (77)
    • ►  November (146)
    • ►  October (52)
    • ►  September (109)
    • ►  August (160)
    • ►  July (151)
    • ►  June (14)
    • ►  May (26)
    • ►  April (137)
    • ►  March (104)
    • ►  February (144)
    • ►  January (149)
  • ▼  2015 (1446)
    • ►  December (127)
    • ►  November (105)
    • ►  October (83)
    • ►  September (70)
    • ▼  August (79)
      • நதி
      • பெரியது கேட்கின்
      • பிரபஞ்சத்தின் மையம் எது?
      • ஹெர்மிஸ்
      • உடலோம்பல்.
      • ஆடையை தளர்த்திக்கொள்ளுதல்:
      • கண்ணன் என்னும் கள்மரம்.
      • ஐந்தாவது அதிசயம்.
      • மதுசக்கரம்
      • எறும்புலகம்
      • நண்பன்
      • சட்டம் தன்கடமையை செய்யும்
      • புலிக்குருளை பாதை
      • சோனகப்புரவிகள்
      • கதைக்குள் நிஜம்
      • எளிய மனிதர்களின் ஏக்கம்:
      • காலமெனும் கரைப்பான்:
      • கானகவேங்கையின் தின்பண்டம்.
      • ஆணுள் பெண்
      • தாய்மை
      • நம்பிக்கை
      • வெண்முரசு கூடுகை
      • கனவுகள் முடிவதில்லை
      • கண்ணனும் சாத்யகியும்
      • குற்றத்தின் மூலம் உருவாகும் நற்பலன்.
      • வெண்முகில் நகரம் - ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்
      • காவியம்
      • ஆன்மாவின் புன்னகை
      • சொற்கள்
      • குழலிசை
      • வினாக்குறி
      • இளையவர்
      • இருவித ஐயங்கள்:
      • மகத்தான மனத்தடை
      • அளிக்கொடை
      • தெய்வம் வளர்கிறது.
      • குற்றம் கடிதல்
      • நண்பனின் குற்றம்
      • இரண்டு கோதண்டராமர்கள்
      • நீலம் மறுபதிப்பு- முன்னுரை
      • வெண்முகில் நகரம் முன்னுரை
      • நகையாட்டு..!
      • வெண்முகில்நகரம் சொற்கள்
      • சிலிர்ப்பு
      • வெண்முரசு விவாதக் கூடுகை
      • தரிசனம் நிகழ்ந்த கணம்.!
      • சியமந்தகக் காலம்
      • முகில்நகர்
      • வெண்முரசு ஆடியோ
      • அன்றும் இன்றும்
      • கீதை
      • அபயக்கரமும் கொலைவாள் கரமும்
      • விவாதங்களில் வெல்வது
      • காலத்தின் அசைவு
      • நீலத்தின் கதை
      • புரவி
      • தெய்வமேறுதல்
      • ஜராசந்தரின் வறண்ட மனம்
      • தந்திகள்
      • மீண்டும் புராணம்:
      • அறம் வாழும் பூமி
      • உறவுகளுக்கிடையிலான அரசியல்
      • ஆடிகள்
      • உரைகல்
      • சேர்ந்து விளையாடட்டும் பிள்ளைகள்
      • கண்ணனை வலம் வருதல்
      • உவமைகள்
      • ருக்மியின் நிலை
      • ருக்மி ஏற்க மறுத்த தோல்வி
      • அமிதை மோட்சம்
      • அமிதையின் மீட்சி:
      • நற்காட்சி:
      • அன்னை கண்ட போர்
      • குந்தியும் கர்ணனும்
      • அறத்தான்
      • ஓவியம்
      • சுழி
      • ஒன்பது அன்னையர்
      • அகலாதவளின் பதற்றம்
    • ►  July (69)
    • ►  June (84)
    • ►  May (131)
    • ►  April (178)
    • ►  March (167)
    • ►  February (152)
    • ►  January (201)
  • ►  2014 (808)
    • ►  December (188)
    • ►  November (153)
    • ►  October (166)
    • ►  September (133)
    • ►  August (43)
    • ►  July (124)
    • ►  January (1)
Simple theme. Powered by Blogger.