Sunday, January 22, 2017

கிராதம் முழுமைத்தோற்றம்






அன்புள்ள ஜெ

கிராதம் முடிந்துவிட்டது. அடுத்த நாவல் எப்போது வரும் என்று காத்திருக்கிறேன். இப்படி தொடர்ச்சியாக வாசிப்பதிலுள்ள சிக்கல் என்னவென்றால் முறையாக வாசித்தோமா நாவலின் முழுவடிவமும் மனதில் வந்ததா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருப்பதுதான்.

வெண்முரசு நாவல்களை வாசிப்பதிலே பலவகையான விஷயங்கள்தேவையாகின்றன ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு வடிவம் உள்ளது. அந்த வடிவத்தை முழுமையாக வாசித்து மனதிலே அடையவேண்டும். அதேமாதிரி ஒட்டுமொத்தமாக வெண்முரசின் ஓட்டமும் நினைவில் நின்றாகவேண்டும்

உதாரனமக கிராதம் ஒரு தனிநாவலகவே வாசிக்கலாம். அர்ஜுனனின் திசைவெற்றிகளும் சிவனைப்பார்த்தலும் ஒரு சரியான ஒருமையுடன் உள்ளன. ஆனால் வெண்முரசு ஒரு பெரிய சமூக சித்திரத்தை அளிக்கிறது. அதை பின்னாடி ஒரு போராக ஆக்கப்போகிறது. அதில் நால்வேதம் ஒரு தரப்பாகவும் வேதாந்தம் ஒரு தரப்பாகவும் இருக்கப்போகிறது அதில் வைத்து கிராதம் நாவலை வாசிக்கவேண்டியிருக்கிறது.

இரண்டுவாசிப்புகளும் சேர்ந்தே நடந்தால்மட்டுமே அது சிறப்பான வாசிப்பாக அமையும். ஒட்டுமொத்தமாக வாசிப்பதற்கு புத்தகம்தான் சரியான வழி என நினைக்கிறேன்

எஸ்.ஆர். சிவராமன்