Sunday, January 22, 2017

திருணவிரதன்






அன்புள்ள ஜெ

வெண்முரசு நீலம் நாவலை நான்காவது முறையாக இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். பல தளங்களில் நான் அந்நாவலை வாசித்திருக்கிறேன். ஏனென்றால் நான் வாசிக்க ஆரம்பித்தது மிகவும் பிந்தித்தான். ஆகவே நீலம்பற்றி எழுதப்பட்ட அனைத்தையும் நானே முழுமையாக வாசித்தேன். அந்த வாசிப்புகளுடன் என்னுடைய வாசிப்புகளையும் சேர்த்துக்கொண்டேன். பல அர்த்தங்கள்.

நான் எதையுமே தவறவிடவில்லை என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். இந்தமுறை வாசித்தபோதுதான் ஒரு மின்னல்போலத் தோன்றியது ஒருகருத்து. திருணவிரதன் என்னும் அசுரனின் கதை எதைச்சுட்டுகிறது? கண்ணன் யாதவன், புல்லைச் சார்ந்து வாழ்பவன். திருணம் என்றால் புல். புல் பறவையாகவும் புயலாகவும் வந்து யாதவனை கொல்லமுயல்கிறது. எது அவன் வாழ்வோ அதுவே வருகிறது எதிரியாக. ஆனால் அந்நீலப்பீலியின் ஓரிதழை அசைக்கும் மோகப்பெரும்புயலேதும் இல்லை என்று ஆய்ச்சி கண்டுகொள்கிறாள். இந்த நுட்பத்தையே நினைத்துக்கொண்டிருந்தேன்

லட்சுமணன்