Sunday, January 22, 2017

விளையாட்டு



அன்புள்ள ஜெ

வெண்முரசு நாவல்களில் இதுவரை வந்தவற்றில் எனக்கு மிகவும் பிடித்தமானது காண்டீபம்தான். அதில் அர்ஜுனனின் யாத்திரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. முதலில் ஒரு கனவுநிலமாக நாகர் உலகம். அடுத்து உண்மையுலகம். ஆனால் அதில் வேர்களின் உலகம் இருக்கிறது. அடுத்தது வெறும் யதார்த்த அரசியல்களம். மூன்று உலகங்களிலும் அவன் உலவுகிறான். இவற்றில் முக்கியமானது மணிபுரிதான். அங்கே ஆண் பெண்ணாவது பெண் ஆணாவது என ஏகப்பட்ட உள்ளர்த்தங்கள் கொண்ட ஒரு பெரிய விளையாட்டே நிகழ்ந்திருக்கிறது. அபூர்வமான  ஒரு பகுதி அது

வெண்முரசு நாவல்களை ஒப்பிட்டு வாசிக்கலாம். நன் காண்டீபத்தையும் கிராதத்தையும் ஒப்பிட்டு வாசிக்கவேண்டும் என நினைக்கிறேன்

செல்வராஜன்