Tuesday, November 29, 2016

உச்சம்



 ஜெ

கீழ்க்கண்ட வரியை நினைத்துக்கொண்டே இருந்தேன்

தெய்வங்கள் அழகிலும் சிறப்பிலும் முழுமையை அடைந்ததுமே நிறைவின்மைகொள்கின்றன. ஏனென்றால் முழுமைக்கு அப்பால் நின்றிருப்பவை அவை

வெண்முரசு முழுக்க தெய்வங்கள் வந்தபடியே இருக்கின்றன. இந்தத்தெய்வங்களை எப்படிப்புரிந்துகொள்வது? இவை phenomenons அல்லது concepts . இவற்றுக்கு ஒரு ஒருமை உள்ளது. ஒரு ை phenomenons அல்லது concepts தானாகவே இயங்குவது, அதற்கு என்று ஒரு நோக்கம் உள்ளது என்கிறீர்கள். அதைத்தான் தெய்வம் என்கிறீர்கள். idealism படி எல்லா கருத்தும் அதன் உச்சம் நோக்கிச் செல்கிறது. இங்கே ஒருபடிமேலாகச் சென்று உச்சத்தையும் அவை மேலே மெலே கடந்துசெல்கின்றன என்கிறீர்கள்

மகாதேவன்